பக்கங்கள்

14 ஜனவரி 2014

யாழில் ஆக்கிரமித்த வீடுகளை விட்டு படைகள் வெளியேறுகின்றன!

யாழ்ப்­பா­ணத்தில் படை­யி­னரின் உயர்­பா­து­காப்பு வல­ய­மாக்­கப்­பட்டு அவர்­களின் முகாம்­க­ளா­கவும் காவ­ல­ரண்­க­ளா­கவும் இருந்து வந்த பல வீடுகள் உரி­மை­யா­ளர்­க­ளிடம் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் மீள ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கின்­றன. நாவற்­குழி, கைதடி, நுணாவில் பிர­தே­சங்­களில் உள்ள இரா­ணுவ முகாம்கள் முற்­றாக மூடப்­பட்­ட­துடன் இப்­ப­கு­தி­களில் முகா­மிட்­டி­ருந்த இரா­ணு­வத்­தினர் சாவ­கச்­சே­ரியில் அமைந்­துள்ள பிர­தான முகா­மிற்கு மீளச்­சென்­றுள்­ளனர். அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தில் மிகவும் சர்ச்­­சைக்­கு­ரிய முகா­மாக இருந்து வந்த செம்­மணி படை முகாங்­களும் காவ­ல­ரண்­க­ளும் அகற்­றப்­பட்­டுள்­ளன. கடந்த 1995ம் ஆண்டு முதல் படை­யி­னரின் முகாம்­க­ளாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருந்த வீடு­களே பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன. வலி.வடக்கின் வலித்­தூண்டல் பகு­தியில் அமைந்­தி­ருக்­கின்ற இரு படை­மு­காம்­களும் முற்­று­மு­ழு­தாக விடு­விக்­கப்­பட்டு பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை தெல்­லிப்­பழை அம்பன் பகு­தியில் தனியார் வீடொன்றில் அமைந்­தி­ருந்த முகா­மொன்றும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து இந்த வீட்டின் உரி­மை­யா­ளர்கள் அங்கு சென்று குடி­யே­றி­யுள்­ள­துடன் வீட்டின் வேலி­க­ளையும் அமைத்து வரு­கின்­றனர். மாதகல் தபால் சந்­திக்கு அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவக் காவ­ல­ரண்­களும் நேற்று முதல் திடீ­ரென அகற்­றப்­பட்­டுள்­ளன. வட­ம­ராட்சி பிர­தே­சத்தில் மந்­திகை மற்றும் மாலி சந்­தியில் அமைந்­தி­ருந்த சிறிய முகாம்­களும் நேற்று முன்­தினம் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் வலி­காமம் கிழக்கின் நவகிரி, நிலா­வரை பகு­தி­களில் அமைந்­தி­ருந்த சிறு­மு­காம்­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன. வலி. மேற்குப் பிர­தேச சபைக்­குட்­பட்ட வட்டு.கேணி­ய­டியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சர்ச்­சைக்­கு­ரிய இரா­ணுவ முகாம்­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன. 1995ம் ஆண்டு யாழ். குடா­நாட்­டினை இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றிய போது இந்தப் படை­மு­காம்கள் அமைக்­கப்­பட்­டன. யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் குறித்த முகாம்­களை அகற்­று­மாறு வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களும் உல­க­நா­டுகள் பலவும் இலங்கை அர­சாங்­கத்­தினை வலி­யு­றுத்தி வந்­த­போதும் அகற்­றப்­ப­டா­ம­லி­ருந்த இந்த முகாம்கள் யாழ். மாவட்­டத்­திற்­கான இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் உத­ய­ பெ­ரேரா பத­வி­யேற்ற பின்னர் திடீர் திடீ­ரென தற்­போது அகற்­றப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.