பக்கங்கள்

23 ஜனவரி 2014

விக்கி,சுமந்திரன் ஆகியோரை அமெரிக்கக் குழு சந்தித்தது!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று திடீரென நேற்று புதனிரவு யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. யாழ் சென்றுள்ள குழுவினர் உடனடியாகவே வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.இரவு 8 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் நீடித்திருந்தது. ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா தொடர்பான பிரேரணைகள் கொண்டுவரப்படவுள்ள நிலையில் சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அதிகாரி ஸ்ரீபன் ரப் இலங்கை சென்று இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான சர்ச்சை இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை.அவர்கள் விஜயம் செய்து திரும்பி இரண்டு வாரங்கள் ஆவதற்குள் மீண்டும் மற்றொரு குழு யாழ் சென்றுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும் இக்குழுவினரது இன்றைய சந்திப்புக்கள் பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.