பக்கங்கள்

31 ஜனவரி 2014

நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு ஆரம்பமாகியது!

பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவும், இணைந்து ஏற்பாடு செய்த சிறிலங்கா அரசின் நில அபகரிப்பு தொடர்பான மகாநாடு இன்று காலை 10மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் 14 ஆம் இலக்க அறையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழவில் தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியப் பாரராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். தாயகத்தில் இன்னுயிர் நீர்த்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது மகாநாட்டின் முதற்கட்டமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மற்றும் லீ-ஸ்கொட் ஆகியோர் ஆரம்ப உரைகளை நிகழ்த்தினர். இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா, தென் ஆபிரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து அறிவுஜீவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சிவஞானம் சிறிதரன், கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் நாகேந்திரன், வடகிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.