பக்கங்கள்

02 ஜனவரி 2014

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வட மாகாணம் முதலிடம்!

வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் படி ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தில் அதிகளவான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். மாவட்ட மட்டங்களில் முதலிடம் பெற்ற 20 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், ஏனைய எட்டு மாகாணங்களை விட வடமாகாணம் 2013 க.பொ.த உயர்தரத்தில் முதல் நிலை வகிப்பது என்பது பெருமைக்குரிய விடயமாகும். இம்முறை 63.8 வீதமானவர்கள் வடமாகாணத்தில் சித்தி அடைந்துள்ளதானர். அத்துடன் 1996ஆம் ஆண்டளவில் 40பிள்ளைகளுக்கு ஒருஆசிரியர் வீதம் நியமிக்கக்கப்பட்டனர். தற்போது 17 பிள்ளைகளுக்கு ஒருஆசிரியர் வீதம் நியமனம் வழங்கப்பட்டு போதுமான ஆசிரியர் வளம் வடமாகாணத்தில் உள்ளது. மேலும் வடமாகாண கட்டமைப்புக்களில் பின்தங்கிய பிரதேசமான பூநகரி, ஒட்டுசுட்டான், மடுபோன்ற பிரதேசங்களில் கூட கல்வித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு போதியளவு ஆசிரியர் வளங்களையும் கொண்டுள்ளது. மேலும் கணிதம் ,விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற்றமான எதிர்காலம் கிடைக்க வாய்ப்புள்ளதுடன் இனி நல்ல கல்விப்பெறுபேறு கிடைக்க வேண்டுமாயின் அது பெற்றோர் முயற்சியில் மட்டும் தான் தங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஐந்து மதகுருமார்களுக்கு ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனம் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறியால் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வுக்கு வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் , பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.