பக்கங்கள்

19 ஜனவரி 2014

ஊர்காவற்றுறையில் இளைஞர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறைப் பகுதியில் பற்றைக் காணியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையைச் சேர்ந்த அன்ரன் ஜஸ்ரின் (வயது 19) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமற்போயுள்ளதாக கடந்த 14ம் திகதி ஊர்காவற்றுறை பொலிசில் முறையிடப்பட்டிருந்தது. இந் நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.