பக்கங்கள்

04 ஜனவரி 2014

போர்க்குற்ற ஆணையர் கொழும்புக்கு விஜயம்!

போர்க் குற்றங்களை ஆராயும் தூதுவரான ஸ்டீவன் ஜே ரெப் நாளை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இதனை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நேற்று அறிவித்தார். ஸ்டீவன் அவர்கள் நாளை கொழும்பு வருகின்றார் இவர் 11ம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புகளின் போது, அவர் இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தவுள்ளார். ஸ்டீவன் ரெப் இரண்டாவது தடவையாக இலங்கைக் விஜயம் செய்கிறார். முன்னதாக அவர் கடந்த 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தார். அவரது விஜயத்தின் அடிப்படையிலேயே 2012ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை அமெரிக்கா முன்வைத்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற நிலையில், அது எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை கருதியதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.