பக்கங்கள்

15 ஜனவரி 2014

அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டுமாம்!

வட மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது என தெற்கின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கொள்கைகள் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்வதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் அனந்தி சசிதரன் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வட மாகாணசபைக்கு தெரிவானார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத சிலர் இருப்பதாகவும் அவர்களில் அனந்தி சசிதரனும் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருந்தால் அனந்தி சசிதரன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறான கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருக்க மாட்டார் என பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளித்தால் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அனந்தி சசிதரன் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.