பக்கங்கள்

09 ஜனவரி 2014

மீன் வயிற்றில் பாம்பு!

சந்தையில் வாங்கப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை 5ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ஏ.எம் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன் ஒன்றை சந்தையில் வாங்கிச் சென்றுள்ளார். அவரது மனைவி சமையலுக்காக மீனை வெட்டியபோது மீனுக்குள் ஒன்றரை அடி நீளமான பாம்பு ஒன்று இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவத்தை பார்வையிட வந்த பிரதேச மீனவர்கள் மாரி காலங்களில் செப்பலி,கொய்,கொடுவா போன்ற மீன் இனங்கள் நீர்பாம்புகளை பிடித்துண்ணும் பழக்கம் கொண்டவை எனத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.