பக்கங்கள்

22 ஜனவரி 2014

விஜய் ஆதரவு குப்பைகளுக்கு ஐங்கரநேசன் செம அடி!

நாட்டில் பிள்ளையை காணவில்லை கணவனை காணவில்லை என துடிக்கும் மக்கள் மத்தியில் சினிமா காரணுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் தேவையா என்று ஆர்பாட்டகாரர்களுக்கு தகுந்த விளக்கம் கொடுத்துள்ளார் ஐங்கரநேசன்.யாழில் உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட நடிகர் விஜய் படம் தொடர்பிலான விமர்சனத்தை அதன் தொண்டர்கள் என கருதப்படும் சில இளைஞர்கள் எதிர்த்ததுடன் அது குறித்து தங்களிடம் மன்னிப்பு கேட்குமாறு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போரில் சொந்தபந்தங்களை இழந்து தவிக்கும் தமிழர்கள் இன்று உலகநாடுகளிடம் நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான இளைஞர்கள் ஒருசிலர் இருப்பதை காணாக்கூடியதாக உள்ளது இவர்களுக்கு விவசாய அமைச்சர் நல்லதொருகருத்தினை கொடுத்துள்ளார். சினிமா காரர்களுக்கு பால்வார்ப்பதும் கட்டவுட் வைப்பதும் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எல்லாம் நீங்கள் தமிழர்களா ஒரு பத்திரிகைக்கு எதிராக ஆர்பாட்டம் செய்கின்றீர்கள். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்து சொல்ல ஆட்கள்இல்லாமல் இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்து சொல்லும் ஊடகத்திற்கு எதிராக ஆர்பாட்டம் செய்த இளைஞர்களுக்கு விவசாய அமைச்சர் காட்டமாக எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.