பக்கங்கள்

17 ஜனவரி 2014

அனந்திக்கு புனர்வாழ்வு அளித்தால் அரசு மோசமான நிலைக்கு செல்லும்!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்க முற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இன்று இதனை அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் nஐனீவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அச்சம் கொள்ளத்தொடங்கியுள்ளது. இதனாலேயே இங்குள்ளவர்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது இதனொரு செயற்பாடாகவே இனத்திற்காக போராடி வருகின்ற அனந்தி சசிதரன் போன்றோரை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாராலும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கமுடியாரெதன்றும் அவர் தெரிவித்தார். அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு வடுதலை செய்யப்பட்டவர்களை மீண்டும் புனர்வாழ்விற்கு அனுப்புதல், அதே போன்று பலரை புனர்வாழ்வுக்கு அனுப்பபடுமென எச்சரிக்கை செய்தல், புதிதாக பலரை புனர்வாழ்விற்கு அனுப்புதல் போன்ற மிக கேவலமான செயல்கள் இங்கு தான் இடம்பெறுகின்றது. குறிப்பாக தனது கணவரை காணாமல் தேடி அலையும் சாதாரண குடும்பத் தலைவியாக போராடியவர் இன்று மக்கள் ஆணையுடன் தன்னைப் போன்ற பிரச்சனைகளையுடைய குடும்பங்களின் தலைவியாகவும் மக்களுடன் மக்களாக நின்று தனது இனத்திற்காக சக உறுப்பினர் அனந்தி சசிதரன் போராடி வருகின்றார். இவ்வாறு தமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுகின்றவர்கள் மற்றும் இந்த இனத்திற்காகப் போராடுகின்ற அனந்தி சசிதரன் போன்றவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதும்; மிரட்டப்படுவதுமான சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக கடந்த வாரம் அனந்தி சசிதரனுடைய இடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டால் தமாம் கலந்து கொள்ளப் போவதில்லை என பொலிஸ் மற்றும் படையினர் தெரிவித்ததுடன் நிகழ்வையும் புறக்கணித்திருந்தனர். இதே போன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் இராணுவத்தினர் அதீதிகளாக அழைபக்கப்பட்டனர். அதே வேளையில் அந்த நிகழ்வில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இதனை அறிந்து கொண்ட இராணுவத்தினர் இந்நிகழ்விற்கு சிவாஜிலிங்கம் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. ஆயினும் அரசின் இத்தகைய செயற்பாடுகளினால் நாம் பயந்து விடுவோமென அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் நாம் ஒரு போதும் பயப்படப்போவதில்லை மாறாக இந்த அரசாங்கமே ஜெனிவாக் கூட்டத்
தொடரை நினைத்து நினைத்து பயப்படுகின்றது. அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் முற்பட்டால் அது மிக மோசமான நிலையைத் தோற்றுவிக்கும். குறிப்பாக தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போடுவது போன்றதாகவே அமையுமென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.