பக்கங்கள்

09 டிசம்பர் 2013

விழி பிதுங்கும் வேலணை பிரதேச சபை தலைவர்!

தோழர் கமல் அவர்களின் உத்தரவுகளை தலை மேல் ஆணையாக நினைத்து செயல்ப்பட்ட தமக்கு சிக்கல்கள் முன்னே வந்து நிற்கின்றன என்கிறார் வேலணை பிரதேசசபை தலைவர். இங்கு தான் பொறுப்பாளராக நிலைத்து நீடிக்க வேண்டும் என்றால் தோழர் கமல் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதையும் அவர் சொல்லும் வேலைகளையும் செய்து தானே ஆகவேண்டும்.வேலணையில் நடைபெற்ற நாம் செய்த பல அசாதாரண வேலைகள் வெளிப்படும் ஆபத்து கமல் மூலம் ஏற்பட்டால் நாம் திண்ணையை காலி செய்துவிட்டு ஓட வேண்டியது தான்.கூட்டமைப்பு தீவகத்தில் கால் ஊன்றுவதை தடுப்பதற்காக நிசாந்தனின் தீவிர விசுவாசியான வேலணை வங்களாவடி அதிகாரி என்று அழைக்கப்படும் சதாசிவம் லோகேஸ்வரனின் கதையை முடித்தபடியால் தான் என்னால் வேலணை பொறுப்பை தக்க வைக்க முடிந்தது.ஆனால், நெடுந்தீவில் ராஜீவ் கூட்டமைப்பின் விந்தனின் ஆதரவாளர்கள் சிலரை கமல் சொன்னது போல் செய்யாமல்விட்டது. ரஜீப் செய்த மிகப்பெரிய பிழை.புங்குடுதீவு யாழ் வர்த்தகர்கள் பலரிடம் கமல் கப்பம் பெற்றது தொடர்பில் கமலுக்கும் ரஜீபுக்கும் இடையில் பிரச்சனை நீருபூத்த நெருப்பாக நெடுங்காலம் இருந்து வந்தது.கமல் எங்களை மாட்டிவிட்டால் பலபிரச்சனைகள் வெளியாகிவிடும். நாங்கள் விசாரணைகளில் உண்மைகளை வெளிவிடுவதை தவிர வேறு வழி எமக்கு இல்லை. என தனக்கு நெருங்கிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தார் என இணையமொன்றில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.