பக்கங்கள்

06 டிசம்பர் 2013

மாவீரன் நெல்சன் மண்டேலா காலமானார்!

காவியநாயகன் நெல்சன்
தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார். சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த மண்டேலா தனது 95ம் வயதில் காலமானார். நிறவெறிக்கு எதிரான அரசியல் போராட்டங்களுக்காக மண்டேலா தனது இளமைக் காலத்தின் 27 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1990களில் சிறையிலிருந்து விடுதலையான மண்டேலா, தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக போட்டியிட்டு முதல் கறுப்பின ஜனாதிபதியாக தெரிவானார். இந்த தேசம் மிக தலைசிறந்த பிரஜையை இழந்து விட்டது என தற்போதைய ஜனாதிபதி ஜெகோப் சூமா தெரிவித்துள்ளார். மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மண்டேலாவின் வீட்டுக்கு எதிரில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் குழுமி தங்களது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர். 1993ம் ஆண்டில் மண்டேலா நோபள் சமாதான விருதினைப் பெற்றுக்கொண்டார். 1994ம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மண்டேலா 1999ம் ஆண்டு கட்சித் தலைமைப் பதவியை துறந்தார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் மண்டேலாவின் மறைவிற்கு ஆழந்த இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.