பக்கங்கள்

02 டிசம்பர் 2013

சிதம்பரத்தின் தேர்தல் பேச்சு அம்பலப்படுத்தியது சிறிலங்கா!

இலங்கையில் இணைந்த வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என்ற இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு இலங்கை அரசு காட்டமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். 'இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், 'வாக்கு சேகரிக்கும் நோக்குடன்' அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை பெரிய அளவில் கணக்கில் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தமிழோசையிடம் தெரிவித்தார். 'அமைச்சர் சிதம்பரம் தேர்தல் வாக்குகளுக்காக பேசிய கருத்துக்களை இலங்கை கணக்கில் எடுக்காது' என்கிறார் இலங்கை அமைச்சர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்ற அமைச்சர், ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டதாகவும் கூறினார். பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். 'முதலில் இந்தியாவின் பிரச்சனையை தீருங்கள்' 'எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள் இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள். எங்கள் நாட்டுப் பிரச்சனைகள் பற்றி அவர்கள் பேசவேண்டியதில்லை. அவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றும் இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த் கூறினார். 'கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் சிதம்பரத்தை முதலில் இங்கு வந்து நிலைமையை பார்க்கச் சொல்லுங்கள். தென்னிந்தியாவை விட வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்' என்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அதிகாரியான சுசில் பிரேம்ஜயந்த் தமிழோசையிடம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.