பக்கங்கள்

17 டிசம்பர் 2013

கருணாநிதி தமிழகத்து ராஜபக்ஷ:ராஜபக்ஷ இலங்கையின் கருணாநிதி – நாஞ்சில் சம்பத்

கருணாநிதி தமிழகத்து ராஜபக்ஷ என்றும் ராஜபக்ஷ இலங்கையின் கருணாநிதி என்றும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்து பேசினார். அ.தி.மு.க ஆட்சியின் இரண்டாண்டு சாதனை மற்றும் ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான மனோகரன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், எம்.எல்.ஏ பரஞ்சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், “எம்.ஜி.ஆர். 11 ஆண்டு காலமும், ஜெயலலிதா 12 ஆண்டு காலம் நிறைவு செய்து இன்று 13வது ஆண்டில் ஜெயலலிதா அடி எடுத்து வைத்துள்ளார். இன்று கருணாநிதி, இலங்கைத் தமிழருக்கு ஆதரவா தீர்மானம் வாசிக்குறாரு. காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லன்னு பொதுக்குழுவில் அறிவித்திருக்கிறார். உண்மை என்னவென்றால் அந்த ரெண்டு கட்சியுமே கருணாநிதியை சேர்த்துக்கொள்ள தயார் இல்லை. தனிச்சு விடப்பட்டவர் இன்னிக்கு இவர் தனியா போறதா சொல்றாரு. உங்க நடிப்பை மக்கள் மறக்க மாட்டாங்க. பிரதமர் மன்மோகன் சிங் 23 பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கியவர். அவர் ஒரு முறை விமானத்தில் நியூயார்க் போனாராம். டெல்லியில் வைத்து அவரிடம் என்ன சாப்பாடு வேண்டும் என்று பணிப்பெண் கேட்டாராம். ஆனால், விமானம் நியூயார்க்கில் தரை இறங்கும் வரைக்கும் மௌனமாக இருந்தாராம். மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும் செய்யாமல் சும்மா வேடிக்க பார்த்த கருணாநிதி இன்றைக்கு ஈழ மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர் அசஞ்சு கூட கொடுக்கல. திருச்சி, ஊட்டினு இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுத்தார். தமிழகத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சி நடப்பதை போல, இலங்கையில் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபாய ராஜபக்ஷன்னு ஒரு குடும்ப கூடமே ஆட்சி செய்து. கருணாநிதி தமிழகத்து ராஜபக்ஷ, ராஜபக்ஷ இலங்கையின் கருணாநிதி, இந்த இரண்டு பேருக்கும் வித்தியாசம் இல்லை. அம்மாவைப்போல் சட்ட சபையில் தீர்மானம் போடாத கருணாநிதி, தன்னுடைய மகளை அனுப்பி ராஜபக்சேவிடம் பரிசு வாங்கிட்டு வந்து பொக்கிஷமா பாதுகாக்கிறார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.