பக்கங்கள்

07 டிசம்பர் 2013

விசா மறுப்பால் அவதிப்படுகிறார் ஜகத் டயஸ்!

தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தம்மை ஓரம் கட்ட முயற்சிப்பதாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் படையினருக்கு சூழ்ச்சித் திட்டங்களை கட்டவிழ்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கான வீசா மறுக்கப்பட்டமை ஓர் சாதாரண விடயமாக கருதப்பட முடியாது எனவும் அவர் அங்கலாய்த்துள்ளார். இம்மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜகத் டயஸ் வீசா கோரி விண்ணப்பித்த போதிலும், வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி படையினரை தண்டிக்க சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் ஜகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக உலகின் ஏனைய நாடுகளில் போராடிய படையினருக்கு எதிராக இவ்வாறான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஜகத் டயஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய படையினரை தண்டித்து, பயங்கரவாதிகளை பாதுகாக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வீசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து வெளியிட முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.