பக்கங்கள்

11 டிசம்பர் 2013

சிறீலங்கா ஜனாதிபதிக்கு புத்தபெருமான் நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும்!

சிவாஜிலிங்கம் 
சிறிலங்கா ஜனாதிபதிக்கு புத்தியே இல்லை, புத்த பெருமானாவது அவருக்கு நல்ல புத்தியினைக் கொடுக்க வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் கிண்டல் அடித்துள்ளார். சிவாஜிலிங்கத்தின் இந்தக் கருத்தினைக் கேட்டு சபையில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டனர்.நேற்று செவ்வாக்கிழமை வடக்கு மாகாணசபையின் அமர்வு இடம்பெற்றது. இவ்வமர்வில் விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மக்களுக்காக போராடி உயிர்நீர்த்த அமரர் முன்னாள் ஜனாதிபதி நெல்ஷன் மண்டேலாவின் இறுதிக் கிரிகைக்காக சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிற்கு புத்தி கிடைக்க வேண்டும். புத்த பெருமான் அவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஜனாதிபதிக்கு எதிராகவோ அமைச்சர்களுக்கு எதிராகவோ இங்கு உரையாற்றக் கூடாதென சபை முதல்வர் சீ.வீ .கே.சிவஞானம் குறிப்பிட்டபோது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம்"அவரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதனைக் குறிப்பிடவில்லை, ஆண்டவன் அவருக்கு அருளைக் கொடுக்க வேண்டும் ஏன்ற நோக்கத்தினாலேயே இதனை நான் இங்கு குறிப்பிடுகின்றேன்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.