பக்கங்கள்

01 டிசம்பர் 2013

புங்குடுதீவில் கொல்லப்பட்டவர் தொடர்பில் ஒருவர் கைது!

ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் . பிடரிப் பகுதியில் காயமிருந்தமையினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது , அவரது தலையிலிருந்து துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டது.தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதேச சபைத் தலைவர் இறப்பதற்கு முன்னர் பயணம் செய்த ஆட்டோவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணையினை ஆரம்பித்திருந்தனர்.இந்நிலையில் நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.இதேவேளை இக்கொலை ஈ.பி.டி.பியின் உள்முரண்பாடாக இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.