பக்கங்கள்

20 டிசம்பர் 2013

கூட்டமைப்புக்குள் சுயநலவாதிகள் என முதல்வர் சாடல்!

கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார். எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாது போனால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம். அல்லது ஒத்துப்போக முடியாதவர் தமது பதவிகளை ராஜினாமாச்செய்யலாம். அதை விடுத்து எமது கட்சி சார்பில் கொண்டுவரும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை தோற்கடிப்பது மன்னிக்க முடியாத குற்றம். ஏனெனில் அதில் குறைகள்; இருந்தால் ஏற்கனவே அதனை பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறான நடவடிக்கைகள் எடுத்து தமது வரவு செலவுத்திட்டத்தை தாமே தோற்கடித்தவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தனதுரையினில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.