பக்கங்கள்

04 டிசம்பர் 2013

சர்வதேச விசாரணை வேண்டும்!

சிறிலங்காவில் 2006ம் ஆண்டு சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட (ACF) பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனக் கோராப்பட்டுள்ளது. பிரான்சினை தளமாக கொண்டு இயங்கும் பட்டினிக்கு எதிரான அமைப்பு, டிசெம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளினையொட்டி தலைநகர் பரிசில் இயங்கும் மெட்ரோ தொடருந்தது ( Odeon ) நிலையத்தில் பரப்புரையொன்றினை மேற்கொண்டிருந்தது. மனிதநேயப்பணியாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படுவதான அகண்ட காட்சிப்படம் பலரது கவனத்தினைப் பெற்றிருந்ததோடு, அனைத்துலக விசாரணை வேண்டி ஒப்பங்களும் குறியீட்டுரீதியாக பெறப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பங்கெடுத்து தங்களது தோழமையினை தெரிவித்துக் கொண்டதோடு , அனைத்துலக விசாரணைக்கு ஒப்பமிட்டுக் கொண்டிருந்தனர். இதேவேளை இப்படுகொலை தொடர்பில் 28 பக்கங்கள் கொண்ட ஆவணக் கையேடொன்றினை வெளியிட்டுள்ள ACF அமைப்பு, தனது பணியாளர்கள் முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை சிறிலங்கா அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.