பக்கங்கள்

06 செப்டம்பர் 2012

கடல் வழித் தாக்குதலை எதிர்பார்க்கிறது இலங்கை?! - கிழக்கில் பாரிய போர் ஒத்திகை!

சிறிலங்காப் படையினர் சுமார் இரண்டாயிரம் பங்கேற்கும் கூட்டு இராணுவ ஒத்திகை ஒன்று மட்டக்களப்பு வாகரையில் அடுத்த வாரமளவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீர்க்காகம்– lll – 2012 என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போர்ப்பயிற்சி எதிர்வரும் 10ம் நாள் தொடங்கி 25ம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சியில் சிறிலங்காவின் முப்படையினருடன் வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு, பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். இதற்கு முன்னரும் நீர்க்காகம் என்ற பெயரிலான தாக்குதல் ஒத்திகை நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர். மீண்டும் மீண்டும் ஒரே வகையான போர் ஒத்திகையினை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுவருகின்றமை இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அச்சத்தின் வெளிபாடே என்கிறார் கொழும்பின் மூத்த அரசியல் நோக்கர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.