பக்கங்கள்

12 செப்டம்பர் 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு லஞ்சம் வழங்க முயற்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கே இவ்வாறு லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபிற்கு ஆதரவளித்தால் பணம் வழங்குவதாக பேரம் பேசப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய நான்கு உறுப்பினர்களை இவ்வாறு விலைக்கு வாங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.