பக்கங்கள்

30 செப்டம்பர் 2012

இடம்பெயர் மக்கள் என யாரும் இல்லை என்கிறார் கோத்தபாய!

யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர்,200க்கும் குறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்,விரைவில் இந்த முன்னாள் போராளிகளும்  சமூகத்துடன் மீள இணைக்கப்படுவார்கள் எனவும்  கோத்தபாய  குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 80 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கோத்தபாய  யுத்த வலயங்களில் 6000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 7000 வீடுகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும்  தெரிவித்துள்ளார். போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ளாது நேரடியாக வடக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுமாறும் கோதபாய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.