பக்கங்கள்

08 செப்டம்பர் 2012

வெறி தலைக்கேறிய மாணவர்கள் மோதல்! மூவர் படுகாயம்! திருமலையில் சம்பவம்!

திருகோணமலை அன்புவெளிபுரம் பிரதேசத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அன்புவெளிபுரத்தில் உள்ள மைதானமொன்றில் நேற்று (07) இரவு இம்மோதல் ஏற்பட்டுள்ளது. திருகோணமலை பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் குடிபோதையில் ஏற்பட்ட இம்மோதலால் போத்தலால் தாக்கப்பட்டு மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த மூவரும் திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அன்புவெளிபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.