பக்கங்கள்

17 செப்டம்பர் 2012

வேலணையில் உருக்குலைந்த நிலையில் சடலம்!

வேலணைப் பகுதி கடற்கரையில் இனம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச்சென்ற மக்கள் சடலத்தைக்கண்டு ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலத்தை இனம் காண்பதற்காக வைத்துள்ளார்கள். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் குறிப்பிட்ட சடலம் கடல் தொழிலுக்குச்சென்றவர்களுடையதா அன்றி வேறெங்காவது கடலில் வீந்தவர்களுடையதா என்பது தெரியாத நிலையில் சடலம் உருக்குலைந்து காணப்படுகின்றது. ஊர்காவற்துறை பொலிஸாருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.