பக்கங்கள்

23 செப்டம்பர் 2012

தீவகத்தில் கரையொதுங்கும் சடலங்கள்!

யாழ் குடா நாட்டின் தீவகப் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு இனந்தெரியாத சட லங் கள் மீட்கப்பட்டுள்ளன. இவை தலை துண்டிக்கப்பட்டும், கால்கள் துண்டிக்கப்பட்டும் காணப்பட்டன.. யாழ்.வேலணை சாட்டிக் கடற்கரையில் இனம் தெரியாத இரு ஆண்களின் சட ல ங் கள் மீட்கப்பட்டுள்ளன. புங்குடு தீ வுப் பகுதியில் இனந்தெரியாத ஆண்கள் இரு வரின் சடலங்களும் மீட்க ப்பட்டு ள் ளன. இந்த இனந்தெரியாத நான்கு ஆண்களின் சட லங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறை யில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவி க் க ப் ப டு கி றது.ஆனால் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்த சடலங்கள் தமிழக மீனவர்களினதா? அல்லது காணாமல் போன தமிழர்களின் சடலங்களா? இவர்களைக் கொன்றவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமல் யாழில் சடலங்கள் இருக்கின்றன. சில நாட்களின் பின்னர் அரச அடக்கத்தில் இவை அடக்கம் செய்யப்பட்டுவிடும். கொலைகாரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள், பெற்றவர்களின்,உறவினர்களின் நிலையோ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.