பக்கங்கள்

01 மே 2012

யாழில் சுவரொட்டிகள்!


யாழ்ப்பாணத்தில் மே தினத்தையொட்டி எதிர்க்கட்சிகள் ஊர்வலமாகச் செல்லவுள்ள வீதியோரங்களில் ‘எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்’ என்ற தலைப்பிடப்பட்ட பல சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டுள்ளன
யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்ட மைதானத்தைச் சுற்றியும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ். மக்கள் என்ற அடிக்குறிப்புடன் ‘எமக்கு தனித் தமிழீழம் வேண்டாம்’, ‘தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் துரோகிகள் எமக்கு வேண்டாம்’, ‘மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என இச்சுவரொட்டிகளில் எழுதப்பட்டு பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.