பக்கங்கள்

21 மே 2012

சரத் பொன்சேகா விடுதலை!

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து இன்று மாலை சுமார் 4.50மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.
27 மாதகாலம் சிறைவாசம் அனுபவித்த அவருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்துள்ளதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நவலோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் பொன்சேகா இன்று காலை அங்கிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர், தாம் சமர்ப்பித்திருந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் விலக்கிக் கொள்ளும் மனுவை சமர்ப்பித்தார்.
அதனை நீதியரசர்கள் ஏற்றுக்கொள்வதாக இன்று பிற்பகல் அறிவித்தனர்.
இதையடுத்து மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு அங்கு முறைப்படியான விடுதலை அளிக்கப்பட்டது.
பிற்பகல் 4.50 மணியளவில் சரத் பொன்சேகா சிறையில் இருந்து வெளியேறினார். அவரை பெருமளவு ஆதரவாளர்கள் கூடி நின்று வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.