பக்கங்கள்

01 மே 2012

தம்புள்ளை காளியம்மன் ஆலயத்திற்கு பூரண பாதுகாப்பு!

தம்புள்ளையில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதவழிபாட்டுத் தளங்களை அப்புறப்படுத்த அந்தப் பிரதேச பௌத்த பிக்குகள் முயற்சித்து வருகின்ற நிலையில், பிரதேசத்திலுள்ள காளிகோயிலுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபருக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.. 
தம்புள்ளை புனித பூமி என அவர்கள் கூறும் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றும், இந்துக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாக இனவாத பௌத்த பிக்குகள் கூறிவருகின்றனர். 
அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்புள்ளை விகாரையின் பௌத்த பிக்கு தலைமையில் கும்பலொன்று போராட்டம் செய்து வருகிறது. எனினும், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காளி கோயிலை சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும், அந்தக் கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் காவல்துறை அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு, ஜனாதிபதி கடுமையாக உத்தரவிட்டுள்ளார். 
சிரேஷ்ட ஜோதிடர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி மகிந்த கலந்துரையாடிய பின்னர், காவல்துறை மா அதிபருக்கு அவசரமாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.. 
தம்புள்ளை காளி கோயிலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது ஜனாதிபதியை வெகுவாக பாதிக்கும் எனவும், இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், மே 09ஆம் திகதி இடம்பெறும் குரு பெயர்ச்சியினால் ஜனாதிபதிக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் ஜோதிடர், எச்சரித்துள்ளார்.  
இதனால் கிரக மாற்றத்தின்போது நாட்டில் இருக்க வேண்டாம் எனவும் அவருக்கு ஜோதிடர் அறிவுரை வழங்கியுள்ளார்.. இதன்பின்னரே தம்புள்ளை காளி கோயிலுக்கு முழுமையான பாதிப்பை வழங்குமாறு ஜனாதிபதி, காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இதனையடுத்து அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினரும் இணைந்து காளி கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளனர். 
அத்துடன், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் இந்தப் பாதுகாப்புப் பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.