பக்கங்கள்

16 மே 2012

யாழில்,சிப்பாயை கடித்தெழுப்பிய நாகபாம்பு!


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியிலுள்ள படைமுகாமில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த படைச்சிப்பாய் ஒருவருக்கு நேற்று செவ்வாய் மாலை நாகபாம்பு தீண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த படைச் சிப்பாய் காவல் கடமையில் இருக்கும் போது இவர் தூங்கியதாகவும் அருகில் பற்றை ஒன்றிற்குள் இருந்த நாகபாம்பு இவருக்கு கையில் கடித்துச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்புத்துறை இராணுவ அதிகாரி பண்டாராசேனா தெரிவித்துள்ளார்.
தென்பகுதியான மகியங்கனையைச் சேந்த ஜெகத் நந்தகுமார (வயது 26) என்ற இராணுவச் சிப்பாயே நாகபாம்புக் கடிக்கு இலக்கானவராவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.