பக்கங்கள்

29 மே 2012

யாழில் தங்கு விடுதி உரிமையாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

யாழ் மாநகர சபையிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவரைக் கைதுசெய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது. யாழ் நகரில் விருந்தினர் விடுதி என்ற பேரில் காதல் ஜோடிகளை தங்கவைத்து கலாச்சார சீரழிவுக்கு விடுதியை கொடுத்து விபச்சாரத்திற்கு உதவியதாக இந்த விடுதி உரிமையாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள், ஆண்கள் ஜோடியாக தங்குகின்றனர். அத்துடன் விடுதியில் தங்குபவர்களின் அடையாள பதிவினை மேற்கொள்வதில்லை. மது விற்பனை, புகைத்தல் என்பன நடைபெறுகிறது என இந்த வழக்கின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா எதிர்வரும் ஜுன் 16ம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.