பக்கங்கள்

16 மே 2012

திருடர்களை பாதுகாத்த சிங்களப்படைகள்!


இரவு நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை மடக்கிபிடித்த பொது மக்களை படையினர் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, கொள்ளையர்களையும் பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் நுணூவில் மாணாங்குளம் பிள்ளையார் கோவிலடியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வீடென்றில் திருட்டில் ஈடுபட்ட வேளையில் இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டபோதும் நீண்டநேரமாகியும் பொலிஸார் வரவில்லை.
இந்நிலையில், திருடர்களை கால்நடையாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இருந்த இராணுவக் காவலரணில் நின்றிருந்த படையினர், சிங்களத்தில் கொள்ளையர்களுடன் உரையாடியாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் கொள்ளையர்களை பிடித்த பொது மக்களை தாக்கி விரட்டிவிட்டு கொள்ளையர்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். படையினரது இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.