பக்கங்கள்

06 மே 2012

சிறீலங்காவை அமெரிக்கா உளவு பார்த்ததாம்!

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் உளவு பர்த்ததாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகிய உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ரகசியமாக கண்காணித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் விடுத்த செய்தியை அது சுட்டிக்காட்டியுள்ளது. 
அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் ஹிலரி கிளின்ரன், குறித்த உளவுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.