பக்கங்கள்

30 ஏப்ரல் 2012

.நெடுந்தீவு கழுதைத்தீவாம்"தேரரின் நக்கல்!


நெடுந்தீவைக் ‘கழுதைத் தீவு’ எனக் கிண்டலடித்துள்ளார் மகிபால ஹேரத்!நெடுந்தீவைக் ‘கழுதைத்தீவு‘ என்று கிண்டலடித்துள்ளார் சிறிலங்காவின் சப்பிரகமுவ மாகாண முதல்வர் மகிபால ஹேரத்.
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேக, இம்முறை தமது மே நாள் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சப்பிரகமுக மாகாண முதல்வர் மகிபால ஹேரத்,
“‘கழுதைத் தீவான‘ நெடுந்தீவில் போய் ஐதேக மே நாள் பேரணியை நடத்தட்டும். அங்கு தான் அதிகளவு கழுதைகள் உள்ளன.
அங்கு அவர்களின் ஆதரவாளர்களை ஏற்றிச் செல்ல போதிய கழுதைகள் இருப்பதால் அவர்களுக்குப் போக்குவரத்துப் பிரச்சினை இருக்காது.
அல்லது கழுதைகளுக்குப் பெயர் பெற்ற இன்னொரு இடமான புத்தளத்தில் பேரணியை நடத்தலாம்.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.