பக்கங்கள்

07 மே 2012

நல்லிணக்க ஆணைக்குழு குறித்து ஆராய இன்னொரு ஆணைக்குழு!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமூல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான மற்றுமொரு விசேட ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது. 
அதற்கு நாட்டில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைககளில் கூறப்பட்டவற்றில் எவற்றினை நாட்டில் அமூல்படுத்த முடியும் என்பது குறித்தும் இந்த புதிய ஆணைக்குழு ஆராய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ள இருக்கின்ற பணிகளுக்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
அத்துடன் இந்தக் குழுவில் தலைமை வகிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆணைக்குழுவிற்குரிய ஏனைய உறுப்பினர்களை நியமிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இருப்பினும் மிக விரைவில் இந்த ஆணைக்குழு தமது பணிகளை ஆரம்பிக்கும் என கூறியுள்ளார். இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை நாட்டில் அமூல்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பினை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.