பக்கங்கள்

14 மே 2012

யாழில்,மகிந்த படத்தை ஏந்தி கூச்சலிட்டவருக்கு தர்ம அடி!


யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கருத்தரங்கில் மகிந்தவின் படத்தை தூக்கி வைத்துக் கொண்டு; “மகிந்தவே எமது கடவுள் வெள்ளையனே வெளியேறு” என்று கூச்சலிட்டவர் மக்களினால் அடித்து துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்பாடு செய்த ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வோம் என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் அரசியல் கலந்துரையாடலில் முதன்மை விருந்திராக அமரிக்காவின் இலங்கைத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் போல் காடர், அவரது பாரியார் மற்றும் இந்தியாவின் யாழ் உயர்ஸ்தனிகராலைய உதவித் தூதர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொது மக்கள் என்ற போர்வையில் அரச புலனாய்வுப்பிரிவுனர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்
இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களுக்கும் போராட்டத்தில் உயிர்நித்த போராளிகளுக்கும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
13 வது அரசியல் திருத்தச்சட்டம் தொடர்பாக சட்ட விரிவுரையாளர் குருபரன் முக்கிய உரையாற்றினர் அதனைத் தெடர்ந்து கேள்வி கேட்குமாறு சபையோர் கேட்கப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய குறித்த நபர் ஒலிவாங்கியை கையில் எடுத்து மகிந்த ராஜபக்ஸவின் படத்தைக் கையில் ஏந்தி “மகிந்தவே எமது கடவுள் வெள்ளையனே வெளியேறு என போராடிய மண்ணில் அந்நியரை வைத்து கூட்டமா?” என ஆவேசமாக பேச கூட்டத்தில் இருந்தவர்கள் குறுக்கிட்டு கூச்சலிட்டனர்.
உடனே ஒலிவாங்கியை கொடுத்து வெளியேறிய அவரை மக்கள் சூழ்ந்து தாக்கத் தெடங்கினர் மண்டபத்தை விட்டு வெளியேறிய நபர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தலைமறைவானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.