பக்கங்கள்

26 மே 2012

யாழில் நேற்று கடத்தப்பட்ட மாணவன் விடுதலை!

யாழ்,நகரில் நேற்றுக் கடத்திச்செல்லப்பட்ட மாணவன் இன்று காலையில் நல்லூர் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கலாச்சார உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் புதல்வரான
அக்சையன் நேற்று பிற்பகல் சென் ஜோண்ஸ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை வெள்ளை வானில் வந்த
இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார்.இவர் நேற்றிரவு கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர்
இன்று காலை 7மணியளவில் நல்லூர் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை பிரபாகரன் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
நான்கு நபர்களினால் தான் கடத்தப்பட்டதாக மாணவன் தெரிவித்துள்ளார்.இந்தக்கடத்தல் எதற்காக நடந்தது என்று தெரியவில்லை,கடத்தல்காரர்களின்
நோக்கம் என்னவென்றும் புரியவில்லை என பிரபாகரன் தெரிவித்துள்ளார்.இந்திய தூதரகத்தின் அழுத்தம் காரணமாகவே தனது மகன்
விடுவிக்கப்பட்டதாக தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இக்கடத்தல் தொடர்பாக கோத்தபாயவுக்கும் அரச உயர்மட்டத்திற்கும் இந்திய
தூதரகம் கடும் அழுத்தத்தை பிரயோகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.