பக்கங்கள்

23 மே 2012

தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய கோப்ரல்!


ஆசிரியை ஒருவரின் பதினொன்றரை இலட்சம் பெறுமதியான, தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படும் இராணுவ உயர் அதிகாரியொருவரை(கோப்ரல்) நேற்று முன்தினம் பண்டராவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆசிரியை, பண்டாரவளை எல்ல தொட்ட பிரதேசத்தில் புகையிரத வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் சந்தேக நபரான இராணுவ கோப்ரல்(வயது 39) ஆசிரியையிடம் இருந்து சங்கிலியை பறித்துக் கொண்டு தலை மறைவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இராணுவ கோப்ரல் பண்டராவளை பிரதேசத்தில் உள்ளவர் என்றும் குறித்த ஆசிரியை நகருக்கு வந்து மாலை வேளையில் வீடு திரும்பியதை அவதானித்துக் கொண்டிருந்து அதன் பின் தொடர்ந்து சென்று கொள்ளையடித்துள்ளதாக தெரிய வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.