பக்கங்கள்

02 பிப்ரவரி 2014

நாரந்தனை விபத்தில் தமிழ் பொலிஸ்காரர் மரணம்!

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அளவெட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய குகராஜ் பிரசன்னா என்ற பொலிஸ் அதிகாரி ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நாரந்தனை வடக்குப் பகுதியில் அவர் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.