பக்கங்கள்

03 பிப்ரவரி 2014

கமலேந்திரன் நீக்கம் என்கிறது ஈபிடிபி!

கொலையுண்ட ரெக்சியன் 
வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் EPDP கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து எழுத்து மூலம் கமலேந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் திகதி கமலேந்திரனுக்கு யாழ்ப்பான சிறைச்சாலையின் ஊடாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் திரட்டிய தகவல்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் கமலேந்திரனை கட்சியிலிருந்து நீக்குவது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது என கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டெனியல் ரெக்ஸியன் கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.