பக்கங்கள்

17 அக்டோபர் 2011

நெருங்குகிறது இலக்கு,கலங்குகிறது ஸ்ரீலங்கா!

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளை மாளிகையினால் பரிசீலிக்கப்படும் நிலை உருவாகியிருப்பது சிறிலங்கா அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பான வல்லுனர் ஜிம் மக் டொனால்ட், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ இணையம் மூலம் அமெரிக்க அதிபருக்கு மனு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தார்.
வெள்ளை மாளிகையின் இணையத் தளத்தில் இதுபோன்ற மனுக்கள், குறிப்பிட்டளவு கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அமெரிக்க அரசு அந்த விவகாரத்தைப் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளும்.
சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவளிக்கக் கோரும் மனுவில் 5000 பேர் கையொப்பமிட்டால், அதுபற்றி பரிசீலிக்கத் தயார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
5000 பேரின் கையொப்பங்களை இலக்கு வைத்து இதுதொடர்பான மனுவை, ஜிம் மக் டொனால்ட் வெள்ளைமாளிகை இணையத்தளத்தில் கடந்த மாத இறுதியில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தமனுவில் இன்று காலை 8.15 மணி வரை 4877 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இந்தமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இன்னமும் 123 பேரின் கையொப்பங்களே தேவைப்படுகின்றன.
கையொப்பமிடுவதற்கு ஒக்ரோபர் 29ம் நாள் வரை காலஅவகாசம் உள்ள போதும், இரண்டொரு நாட்களில் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விடும் என்று நம்பப்படுகிறது.
இதனால் அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் வெள்ளை மாளிகையினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை தோன்றியுள்ளது.
இதனால் சிறிலங்கா அரசு கவலையடைந்துள்ளது. அத்துடன் இது தமக்குப் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று கொழும்பு கருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைகளுக்குப் பின்னால், போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் பணியாற்றி, தற்போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள மருத்துவர் ஒருவரும் இருப்பதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கக் கோரும் வெள்ளைமாளிகைக்கான இணையதள மனுவில் ஒப்பமிட இந்த இணைப்பில் அழுத்தவும்.
https://wwws.whitehouse.gov/petitions/%21/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg?utm_source=wh.gov&utm_medium=shorturl&utm_campaign=shorturl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.