பக்கங்கள்

24 அக்டோபர் 2011

மட்டக்களப்பு சிறைக்கைதி ஒருவர் சாவடைந்துள்ளார்!

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். வாழைச்சேனையைச் சேர்ந்த 34 வயதுடைய கைதியே சுகயீனம் காரணமாக உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த கைதி சுகவீனமடைந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கைக்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின்னர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். குறித்த கைதி ஒரு ஆசிரியர் ஆவாரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.