பக்கங்கள்

15 அக்டோபர் 2011

கூட்டமைப்பின் வசமுள்ள சபைகளுக்கு நிதி உதவி இல்லையென பஷில் தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச மற்றும் நகர சபைகளின் அபிவிருத்திக்கென நிதி எதுவும் வழங்கப்படமாட்டாது என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரூக் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுவிற்கான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன் போது பிரதேச அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாருக்,உங்கள் சபைகளின் அபிவிருத்திக்கான நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள். கூட்டமைப்பின் வசமுள்ள சபைகளுக்கு எந்தவித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படமாட்டாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக கூறியிருக்கின்றார்.
இதனை அடுத்து கூட்டத்தில் இருந்த மக்கள், இது எந்த வகையில் நியாயம்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடும் ஆட்சேபம் வெளியிட்டிருக்கின்றனர். நிலைமை கட்டுக்கடங்காது சென்றதை அடுத்து, நிதிக்கான கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில் பின்னர் கூடி ஆராய்வோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாருக் மக்களைச் சமாளித்துச் சென்றதாக நெடுங்கேணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.