பக்கங்கள்

31 அக்டோபர் 2011

நவாலியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நவாலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கள் கிழமை பகல் ஒரு மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெய்வேந்திரம் பாமினி (வயது 37) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் குறித்து விசாரணைகள் உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த மானிப்பாய் பொலிஸார் இவர் மனநோயினால் பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இருந்தும் இவரது மரணம் தொடர்பாக மருத்துவப் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்கிழமை பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.