பக்கங்கள்

26 அக்டோபர் 2011

அவுஸ்திரேலிய அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க முடியாமல் தடுத்ததன் மூலம் அவுஸ்ரேலிய அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய அரசின் இந்த முடிவு அவுஸ்ரேலிய தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஏபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலிய அரசின் முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசின் பெண் பேச்சாளரான சாம்பரி, ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் திகதியை அறிவித்த நிலையில், அரசியல்வாதி ஒருவர் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அறிவித்தது தமக்குப் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பாரபட்சமாக நாம் நடத்தப்பட்டுள்ளதாகவே உணர்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தால் அது அனைத்துலக சட்டங்களை மீறியதாகி விடும் என்று அவுஸ்ரேலிய சட்டமா அதிபர் மக் கிளெல்லன்ட் கூறியிருப்பது தவறானது என்று முன்னாள் அவுஸ்ரேலிய இராஜதந்திரியான புரூஸ் ஹை ஏபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இந்த முடிவு முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவுஸ்ரேலிய சட்டம் பற்றியோ அனைத்துலக சட்டம் பற்றியோ அவர் பார்க்கவில்லை. கொமன்வெல்த் மாநாட்டின் சூழ்நிலை கருதி அவர் அரசியல் ரீதியாகவே முடிவெடுத்துள்ளார்.“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரைக் காப்பாற்ற அவுஸ்ரேலிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அங்கு வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.