பக்கங்கள்

25 அக்டோபர் 2011

யாழ்,பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!காடையர்களின் அடாவடி தொடர்கிறது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படைப்புலனாய்வாளர்களது தாக்குதல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நேற்று மாலை பரந்தன்-பூநகரிப்பகுதியில் வைத்த தாக்கப்பட்ட மற்றொரு பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளான். பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்தவரான ராஜவரோதயன் கவிராஜன்(27 வயது) என்பவரே தாக்கப்பட்டுள்ளார். அவர் யாழ.பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் ஆண்டு மாணவராவார். இவருடன் கூடச்சென்றதாக கூறப்படும் மற்றொரு மாணவன் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். பரந்தன்-பூநகரி வீதியூடாக பயணித்த இவர்களது மோட்டார் சைக்கிளை வழி மறித்த ஆயுததாரிகள் சிலரே கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலன் மீதான தாக்கதலை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினில் முன்னின்று செயற்பட்டவர்கள் இலக்கு வைக்கப்படுவதாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.குறிப்பாக அன்றைய ஆர்ப்பாட்டத்தினில் பங்கெடுத்தவர்கள் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டு அடையாளங்காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.கூரிய கற்கள் இவரது முகத்தை கிழித்துள்ள நிலையில் முதலில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக இன்று யாழ்.போதாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதே வேளை மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்,பல்கலை துணை வேந்தருக்கும் படைத்தளபதி கத்துரு சிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம் பெற்றமையும்,மாணவர்கள் அச்சமின்றி கல்வியை தொடரலாம் என கத்துரு சிங்க உறுதி அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.