பக்கங்கள்

11 அக்டோபர் 2011

புலிகளின் ஆட்சியில் பாலியல் வன்முறைகள் இடம்பெறவில்லை!

முல்லைத்தீவில் நான் அரச அதிபராக இருந்த போது அங்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக என்னிடம் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும், அங்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அளவுக்கதிகமாகக் கிடைத்திருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்கைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்காக தனி அலகு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரச மருத்துவமனை, பிரபல பெண்கள் விடுதி, கிராம அலுவலர் என பல நிறுவனங்களிலிருந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.