பக்கங்கள்

21 அக்டோபர் 2011

அல்லைப்பிட்டியில் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி!

அல்லைப்பிட்டி 02 ஆம் வட்டாரததைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச் சம்பவம் நேற்று விழாயக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருமணமாகி மூன்று மாதங்களேயான இக் குடும்பஸ்தர் குடும்பப்பிரச்சினை காரணமாகவே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளம் குடும்பஸ்தர் மண்டைதீவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.