பக்கங்கள்

28 அக்டோபர் 2011

யாழில் கலாச்சார சீரழிவிற்கு இடம் கொடுத்த விடுதி மீது இனந்தெரியாத இளைஞர் குழு தாக்குதல்!

யாழ்ப்பாணம் கொழும்புதுறை வீதியில் இயங்கி வந்த தனியார் விடுதி ஒன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது குறிப்பிட்ட விடுதியின் உரிமையாளரும் காயமடைந்துள்ளார். இந்த விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டு வந்த நிலையிலேயே திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.கொழும்புத்துறையில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்கும் விடுதி ஒன்றில் யாழ். இளைஞர் யுவதிகளின் தேவைகளுக்கும் அறைகள் வழங்கப்பட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்த விடுதியின் சுற்று வட்டார மக்கள் தமது எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் விடுதியின் உரிமையாளர் எதனையும் கருத்தில் கொள்ளாத நிலையில் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சிலரே இவர் மீதும் விடுதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்..இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த விடுதி உரிமையாளர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை யாழில் இவ்வாறன நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இதே கதி தான் என எச்சரிக்கை விடுத்துச் சென்றதாக யாழ் செய்திகள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.