பக்கங்கள்

21 அக்டோபர் 2011

நயினாதீவை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடற்படையால் கைது!

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறைக் கடல் ஊடாக கடல் அட்டைகளைக் கடத்தி வந்த நயினாதீவைச் சேர்ந்த ஜந்து மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினர் கைது செய்து ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் நயினாதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான ஜந்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த வாரமும் இந்தியாவில் இருந்து கடல் அட்டைகளைக் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட போது 5 இலட்சம் ரூபாயை அபராதமாகச் செலுத்துமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.