பக்கங்கள்

23 அக்டோபர் 2011

பூநகரியில் சடலத்தின் எச்சமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது!

பூநகரி வாடியடி வில்லடிக்குளம் என்ற பகுதியிலிருந்து இராணுச் சிப்பாயொருவருடையது என நம்பப்படும் சடலமொன்றை விவசாயியொருவர் கொடுத்த தகவலினையடுத்து கடந்த வியாழன் பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த விவசாயி 1991ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதே தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்காக பண்படுத்தியபோது இதனுள் மண் அணையொன்று காணபட்டுள்ளது
அதனை துப்புரவு செய்தபோது, இராணுவத்தினர் பயன்படுத்தும் தலைக்கவசத்துடன் சடல எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இது தொடர்பில் குறித்த விவசாயி கிராமசேவகருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு நேற்றுக் காலை சென்ற சட்டவைத்திய அதிகாரி மற்றும், மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார், உள்ளிட்டோர் மேலதிக ஆய்வுகளுக்காக சடல எச்சங்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
எனினும் இது பூநகரிப் பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்ட படை சிப்பாயினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.